மத்தியகிழக்கின் போர் களத்தில் களமிறங்கும் பிரான்ஸின் ரஃபேல் போர் விமானங்கள்
பிரான்ஸ் தனது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இராணுவ தளங்களை பாதுகாக்கும் நோக்கில் ரஃபால் போர் விமானங்களை அங்கு வான்வழி கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நோயல் பாரோட் இது தொடர்பில் வெளியிட்ட கருத்தில், “ரஃபால் போர் விமானங்கள் எங்கள் தளங்களின் மேல் வான்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன” என கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு நடத்திய தாக்குதலைப் பிரான்ஸ் விமர்சித்தது.
விமானங்கள் மேற்கொண்ட பணி
அந்த நடவடிக்கை “சர்வதேச சட்டத்தின் வரம்பிற்கு வெளியே நடைபெற்றது. அதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதியால் விமர்சனங்கள் அடுக்கப்பட்டன.

இவ்வாறான பின்னணியில் மத்திய கிழக்கில் மோதல் வேகமாக விரிவடைந்து வருவதால், பிரான்ஸ் தனது இராணுவ வளங்களை தற்போது அதிகரித்துள்ளது.
அதற்காக அணுசக்தியால் இயங்கும் தனது விமானம் தாங்கி கப்பல் “Charles de Gaulle” மற்றும் அதனுடன் செல்லும் பாதுகாப்பு “Frigate” கப்பல்களை மெடிடரேனியன் கடலுக்கு அனுப்பியுள்ளது.
அந்த விமானங்கள் மேற்கொண்ட பணி குறித்து அல்லது தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதா என்பதற்கான விவரங்கள் இது வரை வெளியிடவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |