ஈரான் பதற்றத்திற்கு மத்தியில் கமேனியின் பிரியாவிடை நிகழ்வு!
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக, மூன்று நாட்கள் நீடிக்கும் பிரியாவிடை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (04.03.2026) புதன்கிழமை இரவு 10 மணி முதல் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி தொழுகை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 36 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த 86 வயதான அலி கமேனி, சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
விடைபெறும் நிகழ்ச்சி
இந்தப் பெரிய அளவிலான விடைபெறும் நிகழ்ச்சிக்குப் பிறகு, இறுதி ஊர்வலம் குறித்த மேலதிக விபரங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் அறிவிக்கப்படும் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கமேனியின் மறைவைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, ஈரானின் அதிகாரம் மூன்று பேர் கொண்ட இடைக்காலச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சபையில் அந்நாட்டின் ஜனாதிபதி, நீதித்துறைத் தலைவர் மற்றும் பாதுகாவலர் சபையின் சட்ட நிபுணர் ஒருவர் இடம்பெற்றுள்ளனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, கமேனியின் அடக்க ஆராதனைகள் முடியும் வரை புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிச் சந்திப்புகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அதேவேளை, டெஹ்ரானுக்குத் தெற்கே உள்ள புனித நகரான கோமில் (Qom), 88 உறுப்பினர்களைக் கொண்ட மதச் சபை இயங்கும் கட்டிடம் மீது நேற்று அமெரிக்க-இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தத் தொடர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் எதிர்காலத் தலைமைத்துவம் குறித்த உலகளாவிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |