மீண்டும் சேவையை ஆரம்பித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...!
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகளை, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில் இன்றிலிருந்து (04.03.2026) மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாகச் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தமது விமான சேவைகளை முடக்கி இருந்தது.
வான்பரப்பின் பாதுகாப்பு
இந்தநிலையில், சர்வதேச வான்பரப்பின் பாதுகாப்பு நிலைமைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ், தற்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விமானங்களை இயக்கத் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இன்று முதல் கொழும்பிலிருந்து துபாய்க்கான UL231 விமானமும், மறுபுறம் துபாயிலிருந்து கொழும்பிற்கான UL232 விமானமும் தடையின்றி இயக்கப்படும் என அந்த நிறுவனம் பயணிகளுக்கு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வான்பரப்பு மூடப்பட்டதால் ரத்து செய்யப்பட்டிருந்த ஏனைய இடங்களுக்கான (தோஹா, ரியாத், தம்மாம், குவைத்) விமான சேவைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |