அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு
accident
dies
highway
fireman
By Kiruththikan
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருநாகல் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த குருநாகல் தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் வீதியின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது பாரவூர்தியில் இருந்த நான்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சாரதியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹேனமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துஹெர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்