மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Sri Lankan Tamils Batticaloa
By Dharu Jun 26, 2026 12:59 PM GMT
Report

ஈழத் தமிழ் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் வகையில், இலங்கையின் மட்டக்களப்பு மண்ணில் முதன்முறையாக உலகளாவிய ரீதியிலான திருக்குறள் மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் ஆரம்பமாகவுள்ளதாக மாநாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத் துறைப் பேராசிரியர் வ. கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.

கல்லடி திருச்செந்தூர் ஆலய சந்நிதான மண்டபத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.

மனித வாழ்வின் உயரிய விழுமியங்களான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைக்கும் திருக்குறளை மையப்படுத்தி, "உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம் காட்டும் வாழ்வியல்" என்ற தொனிப்பொருளில் அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

பல்லேகம தேரர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு! இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் சிறுமி

பல்லேகம தேரர் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு! இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் சிறுமி

திருக்குறள் ஆய்வு

மாநாட்டின் பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பொன். பாலசுந்தரநாதன் (வேல்நம்பி) கலந்துகொள்ளவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய. அநிருத்தனன், அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ. தண்டாயுதபாணி மற்றும் தழங்குடா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி த. கணேசரத்தினம் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்கவுள்ளனர்.

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு | First Ever Global Thirukural Conference In Batti

மேலும், ஈழத் தமிழ் உலகில் புகழ்பெற்ற கம்பவாரதி ஜெயராஜ் கலந்து கொண்டு "ஒரு நூல்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.

திருக்குறள் ஆய்வுகளை வளப்படுத்தும் நோக்கில் மாநாடு இரண்டு ஆய்வரங்குகளாக நடத்தப்படவுள்ளதுடன், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களால் திருக்குறளை மையப்படுத்திய ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இலங்கையின் கிழக்கு, வடக்கு, மலையகம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக, இலங்கையில் முதன்முறையாக திருக்குறளுக்கான சுமார் 1,450 பக்கங்களைக் கொண்ட விரிவான உரைநூலை தனது சொந்த மொழிநடையில் உருவாக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள முனைவர் மனோன்மணி சிறப்பாக கௌரவிக்கப்படவுள்ளார்.

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு | First Ever Global Thirukural Conference In Batti

பாடசாலை மாணவர்களிடையே திருக்குறள் குறித்த விழிப்புணர்வை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. வெற்றிபெறும் மாணவர்களுக்கு திருக்குறள் நூல்கள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

மட்டக்களப்பில் நடைபெறும் இம்மாநாடு, பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடையே திருக்குறளின் அறவாழ்வியல் சிந்தனைகளைப் பரப்புவதோடு, திருக்குறள் ஆய்வுகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் என பேராசிரியர் வ. கனகசிங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலால் விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீனிய பத்திரிகையாளரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்

இஸ்ரேலால் விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீனிய பத்திரிகையாளரின் அதிர்ச்சியூட்டும் புகைப்படம்

மீண்டும் விசாரணைக்கு வருகிறது மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு!

மீண்டும் விசாரணைக்கு வருகிறது மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021