நாமலுக்கு சவால் விடுத்த கடற்றொழில் அமைச்சர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தலைமையில் நவம்பர் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணி பயனற்றது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரை கோபுரத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது எதிர்ப்பு பேரணி குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ”தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நவம்பர் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணி பயனற்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
இந்த அரசாங்கம் மக்களுக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது என்பது மக்களுக்கு தெரியும். நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், கொள்ளைகள், போதைப்பொருள் குற்றங்களை தடுப்பதற்கு இந்த அரசாங்கம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களின் அன்பை வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்தியவர்கள், மோசடியாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தான் அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.
எனவே, இந்த எதிர்ப்பு பேரணியால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எதுவும் செய்ய முடியாது. மக்கள் தெளிவாக உள்ளார்கள்“ என அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்