இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம்: யாழ் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை

Indian fishermen Jaffna SL Protest India Sri Lanka Fisherman
By Shadhu Shanker Feb 18, 2024 01:50 PM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களால் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் படகுகளில் கறுப்பு கொடி கட்டி கடற்தொழிலாளர்கள் போராட்டம்

ராமேஸ்வரத்தில் படகுகளில் கறுப்பு கொடி கட்டி கடற்தொழிலாளர்கள் போராட்டம்

இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

அவர்களை விடுவிக்க வேண்டும் என கோரி தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் போராட்டம் நடாத்தப்படுகிறது. எங்கள் வயிற்றில் அடித்து வயிற்றுப் பிழைப்புக்காக வந்தோம் என இந்திய கடற்றொழிலாளர்கள் கூறுவது தவறு.

fisher man protest

இந்திய அரசு கடல் எல்லையில் நின்று அத்துமீறுபவர்களை தடுத்தால் இந்த பிரச்சினை ஏற்படாது. தமிழ் நாடு கடற்றொழிலாளர்கள் அயல் மாநிலங்களுக்கு சென்றால் இந்திய சட்டத்தின் கீழ் கைது செய்படுவார்கள் என்ற அச்சத்தால் தொப்புள் கொடி உறவு என கூறி இங்கு அத்துமீறி வந்து தொழில் செய்கிறார்கள்.

சில நாட்களாக மயிலிட்டி பகுதியில் தொடர்ச்சியாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.

முல்லைத்தீவில் இராணுவ முகாம்களில் இருந்து அதிரடியாக வெளியேறிய இராணுவத்தினர்

முல்லைத்தீவில் இராணுவ முகாம்களில் இருந்து அதிரடியாக வெளியேறிய இராணுவத்தினர்

போராட்டம் வெடிக்கும்

எங்களுடைய எல்லைக்குள் உள்நுழைவதை நாங்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டோம். யுத்தத்தால் பாதிக்கபட்ட எங்களுக்கு வாழ்வாதாரம் என்பது கடலை நம்பியே உள்ளது.

இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம்: யாழ் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை | Fishermen Jaffna Will Besiege The Indian Consulate

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த பயனுமில்லை, இனியும் இந்த ரோலர் படகுகளை நிறுத்தாவிட்டால் நாங்களே சென்று ரோலர் படகுகளை எரிக்க நேரிடும்.

எனவே இது குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எங்களது போராட்டம் வெடிக்கும்.

இறுதி முடிவு

அரசாங்கத்தை நாங்கள் நம்புவதற்கு தயாராக இல்லை காரணம் அவர்கள் எங்களையும் கைது செய்ய தயங்க மாட்டார்கள்.

இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம்: யாழ் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை | Fishermen Jaffna Will Besiege The Indian Consulate

எனவே இதற்கு ஒரு முடிவு இல்லாதபட்சத்தில் நாங்கள் எங்களது முற்றுகையை முன்னெடுப்போம். 

ஆகவே எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம் - என்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016