இந்திய தூதுவராலயத்தை முற்றுகையிட்ட யாழ் கடற்றொழிலாளர்கள்

Fishing Sri Lanka SL Protest
By Shalini Balachandran Feb 20, 2024 07:17 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் தூதுவராலயம் முன்பாக பெரிமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் தூதுவராயம் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காலை 11 மணியளவில் கடற்றொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராயத்தை நோக்கி முற்றுகையிட சென்ற போது தூதுவராலயத்திற்கு அருகாமையில் போராட்டகாரர்கள் காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.

தாதியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : இவ்வருடம் கிடைக்கப்போகும் கொடுப்பனவு

தாதியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : இவ்வருடம் கிடைக்கப்போகும் கொடுப்பனவு

போராட்டகாரர்கள் 

இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் ஏழு பேர் மட்டும் தூதுவராலயத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது போராட்டகாரர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய தூதுவராலயத்தை முற்றுகையிட்ட யாழ் கடற்றொழிலாளர்கள் | Fishermen Protest In Jaffna

இதன் போது “இந்திய இழுவை படகு உரிமையாளர்களே எங்களையும் வாழ விடு, கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளை பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களை திரும்பிப்பார், அத்து மீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து மற்றும் வடக்கு மீனவர்களின் வளங்களை சூறையாடாதே” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்துக்கிடக்கும் முக்கிய பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்துக்கிடக்கும் முக்கிய பொருள்

காவல்துறையினர்

இதன் போது போராட்டகாரர்களை இடைமறித்த காவல்துறையினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய தூதுவராலயத்தை முற்றுகையிட்ட யாழ் கடற்றொழிலாளர்கள் | Fishermen Protest In Jaffna

குறித்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த கடற்றொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன் பெருமளவிலான காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதிகரித்தது மின்தேவை : குறைந்துள்ள நீர் மின் உற்பத்தி

அதிகரித்தது மின்தேவை : குறைந்துள்ள நீர் மின் உற்பத்தி

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025