கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வெடித்த போராட்டம்
தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முறையான வேலைத்திட்டமோ அல்லது தீர்மானமோ இதுவரை அறிவிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடற்றொழிலாளர்கள் குழுவொன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று (22) இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இன்றும் நாளையும் தொடர்ந்து அதே இடத்தில் தங்கியிருந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
எதிர்வரும் புதன்கிழமைக்குள் திருப்திகரமான தீர்வு கிடைக்காவிட்டால், நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் 2,000க்கும் அதிகமான கடற்றொழிலாளர்களை இந்தப் போராட்டத்திற்கு அழைக்கப்போவதாகவும் அகில இலங்கை கடற்றொழிலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

இதற்கு முன்னதாக ஒன்பது நாட்கள் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் பின்னர், ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக அச் சங்கத்தின் செயலாளர் ஆர். ஏ. டில்ருக் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும், அந்த வாக்குறுதிக்கமைய நாரா (NARA) நிறுவனம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதிக்குள் கடலடி மற்றும் கடற்கரை சார்ந்த களப் பரிசோதனைகளை முடித்திருந்த போதிலும், ஐந்து மாதங்கள் கடந்தும் இதுவரை தீர்வுகள் வழங்கப்படவில்லை்“ எனவும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |