தென்பகுதி கடற்பரப்பில் மற்றுமொரு போதைப்பொருள் கப்பல் பிடிபட்டது
Sri Lanka Navy
Drugs
Arrest
By Sumithiran
இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் கப்பல் என சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றும், அதனுடன் நான்கு சந்தேக நபர்களும் கடற்படையால் கைப்பற்றப்பட்டனர்.
இது சிறிலங்கா கடற்படையின் நீண்ட தூர செயல்பாட்டுக் கப்பல்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.
கடற்படையின் அறிவிப்பு
மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக, சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கப்பல் மற்றும் சந்தேக நபர்கள் கரைக்குக் கொண்டுவரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |