சிரேஷ்ட பிரஜைகளு வெளியான மகிழ்ச்சி தகவல் : அதிகரிக்கவுள்ள வங்கி வட்டி வீதம்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த விடயத்தை இன்று (17.06.2025) அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa ) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கீழ்க்காணும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைப் பிரஜைகள்
* 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் 2025.07.01 தொடக்கம் 2025.12.31 வரையான காலப்பகுதியில் திறக்கப்படுகின்ற நிலையான வைப்புக்களுக்கு குறித்த உத்தேசத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* நிலையான வைப்புக் காலம் 12 மாதங்கள் (ஓராண்டு) ஆவதுடன், உயர்ந்தபட்ச வைப்புப் பெறுமதி ஒரு மில்லியன் ரூபாய்களாகும்.
* சராசரி நிறையிடப்பட்ட நிலையான வைப்பு வட்டி வீதத்திற்கு மேலதிகமாக வருடாந்த வட்டி வீதம் 3மூ இனைச் சேர்த்துக் கிடைக்கின்ற பெறுமதி அல்லது குறித்த வங்கியால் வெளியிடப்படும் நிலையான வைப்பு வட்டி வீதத்துடன் 3 வீதத்தை சேர்த்துக் கிடைக்கின்ற பெறுமதி அல்லது இரண்டில் அதிகமுள்ள வட்டி வீதத்தை செலுத்துதல்.
* ஒட்டுமொத்த நிகழ்ச்சித்திட்டத்தினுல் வட்டிச் சலுகையைச் செலுத்துவதற்காக 30 பில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
📌 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
