ஈரான் - அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அராக்சி விசேட அறிக்கை
எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அறிவிக்க வாய்ப்புள்ளது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
எனினும் இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஈரானிய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சாத்தியமான புரிந்துணர்வு
“ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான சாத்தியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பில் போர்க்களத்தில் இஸ்லாமியக் குடியரசு அடைந்த வெற்றிகளை ஒருங்கிணைப்பதே இந்த ராஜதந்திரத்தின் நோக்கம்.

அந்நாட்டிற்கு எதிரான சமீபத்திய, தூண்டுதலற்ற அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஒரே தரப்பு இஸ்லாமியக் குடியரசுதான்.
இந்த முடிவு ஒரு பெரும் மூலோபாய சாதனையை பிரதிபலிக்கிறது. இந்தப் போரில் ஈரான் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஈரான் மக்களே இந்தக் களத்தின் உண்மையான வெற்றியாளர்கள்.
அணு ஆயுதத் திறன்கள் உட்பட மேம்பட்ட ஆயுதங்கள் இரு தரப்பினரிடமும் இருந்தபோதிலும், ஈரான் அவர்களைத் தங்கள் நோக்கங்களை அடையவிடாமல் தடுத்ததால்தான் வெற்றி கிடைத்தது.
இயல்பாகவே, அத்தகைய வெற்றிக்குப் பிறகு, ஒரு ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்வின் மூலம் அதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! . |