தகுந்த பாடம் புகட்டுவேன் - அமைச்சர்களுக்கு பொன்சேகா கடும் எச்சரிக்கை
பாடம் புகட்டுவேன்
பல்கலைக்கழக மாணவர்கள் மீது கை வைக்கும் அமைச்சர், இராஜாங்க அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது பாடம் புகட்டுவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
பல்கலைக்கழக மாணவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் உள்ள திருடன் கூறுகின்றார். அத்துடன் அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளவர்கள் எதிர்க்கட்சியினரின் முதுகில் குத்துகிறார்கள்.
நான் பயங்கரவாதியல்ல
பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் என இவர்கள் என்னை விமர்சிக்கிறார்கள். கல்விகற்ற அறிவார்ந்த இளைஞர்கள் அவர்களது நிகழ்வுகளுக்கு எனக்கு அழைப்பு விடுத்தால் அதில் சிரேஷ்ட பிரஜை என்ற வகையில் நான் கலந்துகொள்வேன்.
இவ்வாறு நான் கலந்துகொள்வதால் என்னை போராட்டக்காரன் எனவும், பயங்கரவாதி எனவும்
விமர்சிக்கிறார்கள். நான் பயங்கரவாதியல்ல. உலகின் படுமோசமான பயங்கரவாத அமைப்பை
இந்நாட்டிலிருந்து துடைத்தெறிந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.