10 வெளிநாட்டு பெண்கள் அதிரடி கைது: அம்பலமான சட்டவிரோத செயல்!
கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் ஒரு மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மற்றும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பெண்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(14) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் சுற்றுலா விசாவில் வந்து பணிபுரிந்து கொண்டிருந்தாகவும், அதில் நால்வரின் சுற்றுலா விசாக்கள் காலவதியாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்த நடவடிக்கை
25 முதல் 39 வயதுக்குட்பட்ட இந்தப் பெண்களில் 06 பேர் தாய்லாந்து நாட்டினர். மீதமுள்ள 03 பேர் வியட்நாம் நாட்டினர், மற்றவர் சீன நாட்டவர் என்றும் தெரியவருகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் குழு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

