இலங்கை வந்த சுற்றுலா பயணிக்கு விதிக்கப்பட்ட அபராதம்
இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவருக்கு காலி நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டபிள்யூ. டௌரோ யுவான் எட்வேர்ட் என்ற சுற்றுலாப் பயணிக்கே நீதவான் லக்மினி விதானகமகே ரூபா 35,000.அபராதம் விதித்துள்ளார்.
காலி கோட்டை சுற்றுலா காவல்துறையினரால் கைது
இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, மோட்டார் சைக்கிளின் வருமான அனுமதிப்பத்திரம் இன்றி, தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை தொடர்பில் இவர் குற்றவாளியாக இனம் காணப்பட்டதை அடுத்து மேற்படி அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த சுற்றுலா பயணி காலி கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது காலி கோட்டை சுற்றுலா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக காலி காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிளை வாடகைக்கு வழங்கிய பெண்ணுக்கும் அபராதம்
இதேவேனை சுற்றுலா பயணிக்கு மோட்டார் சைக்கிளை வாடகைக்கு வழங்கிய பெண் ஜெயக்கொடி கங்கணம்கே தேவிகா யாசரா என்பவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாத நபருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய குற்றத்திற்காக ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆங்கில ஊடகங்களில் தமிழ்தேசியத்தை கொண்டு சேர்த்த தராகி சிவராமின் நினைவு நாள் இன்று 59 நிமிடங்கள் முன்