சவுக்கங்காட்டிற்கு தீ வைத்த விஷமிகள்! கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டில் உள்ள சமூக காடான சவுக்கங்காட்டிற்கு விஷமிகளால் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி தீயில் ஏரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த பகுதிக்கு இன்று மதியம் 12 மணியளவில் விசமிகளால் தீவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதன்போது, சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை, பிரதேச செயலகங்கள், காவல்துறை, இராணுவம் உட்பட பலருக்கும் அறிவித்திருந்திருந்தார்.
பருத்தித்துறையில் இராணுவ முகாம்களுக்கு எதிராக வெடிக்கவுள்ள பாரிய பேராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இராணுவத்தினரின் வருகை
அதனை தொடர்ந்து, பிற்பகல் 5:15 மணிக்கு பின்னரே மருதங்கணியிலிருந்து இராணுவத்தினர் சுமார் 30 பேர் வரை வருகை தந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு மனிதவலு மூலம் நடவடிக்கைகளை எடுத்திருந்தாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது, குறித்த இடத்திற்கு மருதங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரியும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

