இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கு இலவச அனுமதி
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதலாவது போட்டி
இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கமைய, ரசிகர்கள் முதலாவது போட்டிக்காக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் 4 ஆம் இலக்க வாயில் வழியேயும், இரண்டாவது போட்டிக்காக எஸ்.எஸ்.சி மைதானத்தின் 03, 04, 05 மற்றும் 07 ஆம் இலக்க வாயில்கள் வழியேயும் இலவசமாக மைதானத்திற்குள் நுழைய முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |