பிரான்ஸில் நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனாவுக்கு பலி
corona
death
france
m.p
By Sumithiran
பிரான்சில் கோரத்தாண்டவமாடி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்துள்ள பல்வேறு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், தடுப்பூசி செலுத்தாமல் அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் தலைவருமான ஜோஸ் எவ்ரார்ட்(Jose Evard) (76), தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் வடக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள பாஸ் டி கெலைஸ் பகுதியைச் சேர்ந்தவர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி