கடந்த நான்கு மாதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி - அதிர்ச்சிகர தகவல் வெளியீடு
வீழ்ச்சியடைந்த எரிபொருள் மற்றும் மின்சார பாவனை
கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் நாட்டில் எரிபொருள் பாவனை 65 வீதத்தாலும் மின்சார பாவனை 25 வீதத்தாலும் குறைந்துள்ளதாக 43ஆவது பிரிவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கடந்த 4 மாதங்களில் மார்ச் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில், தினசரி டீசல் நுகர்வு 6,496 லிருந்து 2,299 தொன்னாகவும், பெட்ரோல் நுகர்வு 3,764 லிருந்து 1,226 தொன்னாகவும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சி
மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு மின்சார சபையிடம் டீசல் மற்றும் எரிபொருள் இல்லையென்றாலும், இலங்கை மின்சார சபையின் தேவை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் ரணவக்க தெரிவித்தார்.

எரிபொருள் பாவனையும் மின்சாரத் தேவையும் இந்தளவுக்குக் குறையுமானால் நாட்டின் பொருளாதாரம் எந்தளவிற்கு வீழ்ச்சியடையும், எவ்வளவு செல்வம் மற்றும் வேலைகள் இழக்கப்படும், எத்தனை குடும்பங்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என ரணவக்க கேள்வி எழுப்பி உள்ளார்.