சினோபெக், ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (21) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec) மற்றும் லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) நிறுவனங்களும் தமது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.
இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 122 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 487 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 219 ரூபாயினால் அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் புதிய விலை 572 ரூபாயாகும்.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
எனினும், பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு இணையாக, ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை முறையே 398 ரூபாய் மற்றும் 382 ரூபாய் என மாற்றமின்றி வைத்திருக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளுக்கு நிகராகத் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி, லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 79 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாயாகவும், லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 443 ரூபாயாகவும் மாற்றமடைந்துள்ளது.
மண்ணெண்ணெய் விலை
அத்துடன், ஒக்டேன் 95 வகை பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 455 ரூபாயாகவும், ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 81 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 398 ரூபாயாகவும் காணப்படுகிறது.

மேலும், லங்கா மண்ணெண்ணெய் விலையை 60 ரூபாயினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 255 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |