எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக எதிர்வரும் 21ம் திகதி முதல் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.
அத்துடன், அதுவரை வாகனங்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதுமாத்திரமன்றி, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கு அமைய, வாகனங்களை வைத்திருப்போர், fuelpass.gov.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசித்து தேசிய எரிபொருள் அட்டைக்காக தங்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்தநிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
