டீசலின் விலை 600! எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை..! மக்களுக்கு அறிவிப்பு
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு குறித்து பரவி வரும் பொய் வதந்திகள் காரணமாகவே சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் அவதானிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மசகு எண்ணெய் கப்பல்கள்
இதேவேளை, அடுத்த சில நாட்களுக்குள் இரண்டு மசகு எண்ணெய் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து தலா 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை அந்த கப்பல்கள் ஏற்றி வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையில் கணிசமான உயர்வு இருக்கும் என்று தென்னிலங்கையின் பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ கூறியுள்ளார். குறிப்பாக ஒரு லீற்றர் டீசலின் விலை 600 ரூபாயாக உயரக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |