கடும் எரிபொருள் நெருக்கடி! பாதிக்கப்படும் பேருந்து சேவைகள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு போக்குவரத்து துறையை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில், 25 வீதமான தனியார் பேருந்துகள் மட்டுமே சேவையில் இயங்குவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
உத்தரவு வழங்கப்பட்ட போதிலும், ஆறு இலங்கை போக்குவரத்து சாலைகளுக்கு எரிபொருள் இன்னும் கிடைக்கவில்லை என இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.
பேருந்து நேர அட்டவணைகள் திருத்தப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் ஏ.எச்.பந்துல ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சேவைகளை வழங்குவதைத் தவிர்ப்போம் என அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.