அபுதாபி விமான நிலையத்தை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்! பற்றி எரியும் எரிபொருள் தாங்கிகள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் (Drone) மூலம் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ட்ரோன் (Drone) மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் விமான நிலையத்திலுள்ள 3 எரிபொருள் தாங்கிகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.
விமான நிலையத்தில் விரிவாக்கல் பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றி எரிவதாகவும் இதனால் பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#UPDATE
— TRENDS (@mena_trends) January 17, 2022
Footage from social media shows smoke from the #AbuDhabi airport after the #blast from earlier today.
Visit https://t.co/RjjLN8aqo8 for more news and details. pic.twitter.com/7vjV1REe9s