தமிழர் பகுதியில் அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனையும் அரசு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடல்

Tamils Trincomalee Gajendrakumar Ponnambalam Sri Lanka India
By Shadhu Shanker Jan 20, 2024 03:58 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக அரசானது அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனைகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் மெகா சிட்டி எனப்படும் இந்தியாவின் தலையீட்டுடனான அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் மாவட்ட செயலாளர் ஶ்ரீபிரசாத் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

வங்கி கணக்குகள் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

வங்கி கணக்குகள் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

கடற்றொழிலில் கைவைக்கும் அரசு 

 இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனையும் அரசு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடல் | Gajendrakumar Ponambalam India Srilanka Developmen

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சமூக ஊடகங்கள் முடக்கம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் எனும் போர்வையில் இலங்கை அரசானது அடக்குமுறைச் சட்டங்களை படிப்படியாக கட்டவிழ்த்து விடுகிறது.

அடுத்தபடியாக ஒட்டுமொத்த இலங்கையில் பரவலாக மூன்றில் இரண்டு பகுதி வருமானத்தினை ஈட்டும் கடற்றொழிலில் அரசு கைவைக்கப்போகிறது. கடற்றொழில் எல்லைகள் குறித்த புதியதொரு சட்டத்தினை நடைமுறையாக்குவது குறித்து அரசு கவனம் செலுத்துகிறது.

ஒரு கல்லில் இரு மாங்காய்

இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் இருக்கும் எமக்கே போதிய தெளிவில்லாது காணப்படுகிறது. ஒரு கல்லில் இரு மாங்காய்களை அடிக்கும் செயற்திட்டத்தினை அரசு முன்னெடுக்கிறது.

தமிழர் பகுதியில் அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனையும் அரசு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடல் | Gajendrakumar Ponambalam India Srilanka Developmen

தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக அரசானது தமிழர் பகுதியில் அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினையும் இந்திய தமிழர் உறவுக்கும் இடையிலான முரண்பாட்டையும் ஏற்படுத்த முனைகிறது.

இதன் அடுத்த நிலையாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பொதுமக்களை வெளியேற்றி அதன் மூலமாக அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பரவலான கருத்துக்கள் காணப்படுகின்றன. இதற்கு பின்னணியில் இந்தியா நின்று செயற்படுவதாக பரவலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இளம் குடும்பஸ்தர்

தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இளம் குடும்பஸ்தர்

இந்திய தமிழர் உறவு

இந்நிலையில் இது தொடர்பில் இந்தியப் பிரதிநிதிகளை சந்தித்து தாம் கலந்துரையாடியதாகவும் அதன்போது பொதுமக்களைக் குறிவைத்து அவர்களது காணிகளை அபகரிப்பது இந்தியாவின் திட்டமல்ல.

தமிழர் பகுதியில் அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனையும் அரசு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடல் | Gajendrakumar Ponambalam India Srilanka Developmen

இருப்பினும் இலங்கை அரசு பொதுமக்கள் தற்போது வசிக்கும் காணிகளை அபகரித்து அதிலிருக்கும் பொதுமக்களை நிர்கதியாக்குமாயின் அது குறித்து இந்திய அரசுக்கு தெரிய வர வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுவதாகவும் அது தொடர்பில் இந்தியா கருத்து தெரிவிக்க மறுக்கின்றது” என அவர் குறிப்பிட்டார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
நன்றி நவிலல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021