வீட்டின் பிரதான வாயிலில் காவலர்கள் உள்ளே நடந்த சூதாட்டம் - தாய் ,மகள் உட்பட பலர் சிக்கினர்
வீட்டின் பிரதான வாயிலில் இருவரை கண்காணிப்பாளர்களாக நிறுத்தி வைத்து வைத்துவிட்டு வீட்டினுள்ளே சூதாட்டத்தில் ஈடுபட்ட தாய்,மகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிலியந்தலை தெல்தர பிரதேசத்தில் மதிலால் சூழப்பட்ட வீடான்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 73,940 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள்
கைது செய்யப்பட்டவர்களில் வீட்டின் உரிமையாளரான பெண், அவரது உறவினர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
பின்பக்க சுவர் வழியே பாய்ந்த காவல்துறையினர்
வீட்டின் பிரதான வாயிலில் பாதுகாப்புக்காக நின்ற நபர்கள் அறியாத வண்ணம் காவல்துறை அதிகாரிகள் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக வீட்டுக்குள் சென்று சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை காவல்துறையினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
