கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு : சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
CID - Sri Lanka Police
Law and Order
Ganemulle sanjeewa
By Independent Writer
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும், சந்தேகநபரான கைது செய்யப்பட்ட சட்டத்தரணி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த சட்டத்தரணியை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (05) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அறிவித்தது.
கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த விடயம் இன்று தெரிவிக்கப்பட்டது.
தடுத்து வைக்க உத்தரவு
சம்பந்தப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி பெறப்பட்ட தடுத்து வைப்பு உத்தரவு நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மீண்டும் 90 நாட்கள் தடுத்து வைப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி