வெள்ளைப்பூண்டு விவகாரம்! ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
செய்தி வெளியிடுகின்றமைக்காக ஊடகவியலாளர்கள், விசாரணைக்கு அழைக்கப்படுகின்றமை தொடர்பில் கவலை அடைவதாகவும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது வெள்ளை பூண்டு மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக அழைக்க வேண்டாம் என சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படியே ஊடகவியலாளர்களை விசாரணைக்கு அழைக்க போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உறுதியளித்திருந்தார்.
செய்தி வெளியிடுகின்றமைக்காக ஊடகவியலாளர்கள், விசாரணைக்கு அழைக்கப்படுகின்றமை தொடர்பில் நான் கவலை அடைகின்றேன் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.