சவால்களை தகர்த்தெறிந்து சாதித்த யாழ். மாணவி - நாடாளுமன்ற உறுப்பினர் புகழாரம்
2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ள யாழ் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானிக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் பக்கத்திலேயே இதனால் விடயத்தை தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சியுடனும் கல்வி
அந்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27வது இடத்தையும் பெற்றுள்ளமை மிகுந்த பெருமைக்குரிய சாதனையாகும்.

வாழ்க்கைப் பயணத்தில் எதிர்நோக்கிய கடுமையான சவால்கள் - குறிப்பாக தந்தையை இழந்த துயரநிலையிலும்—மன உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் கல்வியில் தொடர்ந்து முன்னேறியுள்ளமை, சமூகத்திற்கே ஒரு ஊக்கமூட்டும் முன்னுதாரணமாக திகழ்கிறது.
இத்தகைய மாணவர்களின் சாதனைகள், வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்கால தலைமுறையின் நம்பிக்கைக்கும் வலுசேர்க்கின்றன என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
அவரது உயர்கல்விப் பயணம் மேலும் சிறக்கவும், எதிர்காலத்தில் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனளிக்கும் சிறந்த நிபுணராக உருவெடுக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்