முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் - நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்
புதிய இணைப்பு
வெளியாகிய உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தினை சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளார்
குறித்த மாணவன் மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று சாதித்த மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபருமான சிறிதரன் நேரில் சென்று பாராட்டி சென்றுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த தெய்வேந்திரன் திருக்குமரன்,
தெய்வேந்திரன் திருக்குமரன் கருத்து
ஒவ்வொரு நாளும் விருப்பத்துடன் பாடங்களை கற்று வந்தால் உயர்தரப் பரீட்சையில் வெற்றி பெறுவது இலகுவாகும்.
நாம் நினைப்பது போன்று உயர்தரப் பரீட்சை அவ்வளவு கஷ்டமானது அல்ல. ஒவ்வொரு நாளும் படிக்கும் பாடங்களை விரும்பி கற்றுக்கொண்டால் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.
எனக்கு இத்தனை காலமாக ஆதரவளித்த சக மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் துணையாக நின்ற பெற்றோர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெரிதாக பங்கேற்கவில்லை. ஆனால் விளையாட்டு போட்டிகளில் மட்டும் வலய மட்டம் வரை சென்றுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் (கணிதப் பிரிவு) தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.


தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.
பரீட்சைப் பெறுபேறு
இதற்கமைய, இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 527 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேநேரம், 111 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கான தீர்வு முதல் System Change வரை...! புதைக்கப்பட்ட வாக்குறுதிகள் - பகிரங்கப்படுத்திய அலி சப்ரி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்