சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெளியான அறிவித்தல்
எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீடசைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.
இதன்படி பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.தனிப்படட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தனப்பட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள்
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தின் ஊடாக அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதாவது திருத்தங்கள் இருப்பின், திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
திருத்தங்கள் மேற்கொள்ளும் கால அவகாசம்
இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும். திருத்தங்களுக்கான இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு: உடனடி அழைப்பு இலக்கம்: 1911 தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537 பெக்ஸ் இலக்கம்: 0112784422 மின்னஞ்சல்: gceolexamsl@gmail.com
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |