பாடசாலை செல்ல தாய் மற்றும் சகோதரனுடன் பேருந்தில் ஏறியவேளை சிறுமிக்கு நேர்ந்த துயரம்
மாத்தறை திக்வெல்ல, கொட உட பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பேருந்தில் ஏற முயன்ற 6 வயது பள்ளிச் சிறுமி, பேருந்திலிருந்து தவறி விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்ததாக திக்வெல்ல காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், கொடஉட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சனுதி சேனாரா என்ற 6 வயதுடைய சிறுமி ஆவார்
அவர் திக்வெல்ல வடக்கு கல்லூரியில் முதலாம் தரத்தில் படித்து வந்தார். காலையில் பள்ளிக்குச் செல்வதற்காக, தனது தாய் மற்றும் பாலர் பள்ளி வயதுடைய தனது தம்பியுடன் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்.
பேருந்தில் ஏறியவேளை நிகழ்ந்த அனர்த்தம்
அதே நேரத்தில், மாத்தறையிலிருந்து மிதெனியாவுக்கு வந்த தனியார் பேருந்தில் முன்பக்கக் கதவு வழியாக ஏற அவர்கள் முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதலில் தாயும் சகோதரனும்ம் பேருந்தில் ஏற, இரண்டாவதாக அந்தச் சிறுமி ஏறியபோது, பேருந்து முன்னோக்கி நகர்ந்ததாகவும், அப்போது அவள் அதிலிருந்து கீழே விழுந்து அதே பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தின் அடியில் நசுங்கிப் போனதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தில் அந்தச் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்