ஞானசாரதேரருக்கு கிடைத்த ஏமாற்றம்
நாளை (22) இடம்பெறவுள்ள வெசாக் போயா தினத்தை முன்னிட்டு அதிபர் ரணிலின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரரின்(Ven. Gnanasara Thera) பெயர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாய மற்றும் அமரபுர மகா சங்க சபையின் பீடாதிபதிகள், வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வண.கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 பேர் மற்றும் மஹர சிறைச்சாலையில் இருந்து 37 பேர் உட்பட நாடு முழுவதிலும் உள்ள சில சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு அதிபரால் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொது மன்னிப்பு பெறவுள்ளவர்களில்
அதிபரின் பொது மன்னிப்பு பெறவுள்ளவர்களில் பத்து பெண் கைதிகளும் அடங்குவர். மன்னிப்பு அரசியலமைப்பின் 34 வது பிரிவின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-md.webp)
கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்… 5 நாட்கள் முன்
![தனி ஒருவனாய் தமிழருக்காய் விடுதலைக் களமாடிய சிவகுமாரன்](https://cdn.ibcstack.com/article/31410e4e-d06b-45a8-96f0-a8e56f26f6df/24-66613592d067e-sm.webp)