3000 ரூபாயால் குறைவடைந்த தங்கத்தின் விலை
புதிய இணைப்பு
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 389,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், தற்பொழுது 3,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகின்றது.
இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (27) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,516.1 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
சந்தையில் தங்கத்தின் விலை
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 77.26 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலை வீழ்ச்சி காரணமாக இன்று இலங்கையிலும் விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதேவேளை இலங்கையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த ரூபாயின் மதிப்பு கடந்த வியாழக்கிழமை முதல் மீண்டும் படிப்படியாக வலுவடையத் தொடங்கியுள்ளது
மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |