நாகபட்டின படகுசேவையில் தங்கம் கடத்த முயற்சி : காங்கேசன்துறையில் சிக்கிய 26 பேர்
Jaffna
Gold smuggling
Nagapattinam
Sri Lanka Customs
Arrest
By Theepan
காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்திற்குச் செல்லவிருந்த படகில் ஏறவிருந்த இருபத்தாறு பயணிகள், தங்கத்தைக் கடத்த முயன்றதாகச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இன்று (17) SG423 படகு புறப்படுவதற்கு முன்பு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், 17 இந்திய நாட்டினர், மூன்று இலங்கை ஆண்கள் மற்றும் ஆறு இலங்கை பெண்கள் அடங்கிய அந்தப் பயணிகள் தடுத்து வைக்கப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு
சுங்கத்துறையின்படி, சோதனைகளின் போது பயணிகளில் இருவரிடம் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த 26 நபர்களும் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்