ஏலத்திற்கு வரும் டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்க்கப்பட்ட தங்க கடிகாரம்
டைட்டானிக் கப்பலின் பயணிகளில் ஒருவரின் உடலில் இருந்து மீட்கப்பட்ட 18 காரட் தங்க கடிகாரமானது 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் ஏலத்தில் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப் பெரிய பணக்காரர்கள் மற்றும் உயர் பதவியில் இருந்த பயணிகள் பயணித்த கப்பலில் ஒருவரின் உடலில் இருந்து மீட்கப்பட்ட குறித்த கடிகாரமே இவ்வாறு ஏலமிடப்படவுள்ளது.
நூற்றாண்டுக்கும் மேலான பழமையான இந்த கடிகாரம், ஏப்ரல் 14, 1912 அன்று நியூயார்க் நகரத்திற்குச் செல்லும் வழியில் ஒரு பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்து பெறப்பட்டுள்ளது.
மூழ்கிய நேரம்
இசிடோர் ஸ்ட்ராஸுடன் என்ற நபருக்கு சொந்தமானதாக குறித்த கடிகாரம் கூறப்படுகிறது.

குறித்த பேரழிவுக்குப் பிந்தைய நாட்களில், அவரது உடல் அட்லாண்டிக்கில் இருந்து மீட்கப்பட்டதாக அறியப்படுகிறது.
மேலும் அவரது உடைமைகள் பதிவு செய்யப்பட்டு அவரது மகன் ஜெஸ்ஸியிடம் அவரது பிற தனிப்பட்ட பொருட்களுடன் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் அவரது ஜூல்ஸ் ஜூர்கென்சன் பெக்கட் கடிகாரம் இருந்ததாகவும், இது டைட்டானிக் மூழ்கியதாக நம்பப்படும் நேரமான அதிகாலை 2:20 மணிக்கு நிறுத்தப்பட்டதாகவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இசிடோர் மற்றும் அவரது மனைவியின் இறுதி தருணங்கள், ஜேம்ஸ் கேமரூனின் 1997 ஆம் ஆண்டு திரைப்படமான டைட்டானிக் திரைப்படத்தில், வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |