அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு : அநுர அதிரடி அறிவிப்பு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, நாட்டில் பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ள நிலையில், மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் அரசாங்கம் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில் குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அதன்படி, அஸ்வெசும கொடுப்பனவு 17,500 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
8,500 மில்லியன் ரூபாய்
10,000 ரூபாய் அஸ்வெசும கொடுப்பனவு 15,000 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் 5000 ரூபாய் கொடுப்பனவு பெறுவோருக்கு 2500 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 7500 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கமைய, இதற்காக இந்த மாதத்தில் மேலதிகமாக 8,500 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |