உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
உயர்கல்விக்குத் தகுதிபெறும் மாணவர்களுக்கு விசேட கடன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு, அரச சாரா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று (11.02.2025) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரச சாரா பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை
மேலும், ஆண்டுதோறும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்திபெறும் சகல மாணவர்களுக்கும் அரச பல்கலைக்கழகங்களின் கற்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.
எனவே, உயர்கல்விக்கு தகுதி பெற்ற ஏனைய மாணவர்களுக்கும், உயர்கல்வியை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)