அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையில், அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள் இன்று (04) ஆணைக்குழு அலுவலகத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட ஒரு முன்மொழிவின்படி இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.
சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு
2026 ஜூன் 22 திகதியிட்ட விசேட வர்த்தமானி எண் 2494/05-இல் இது அறிவிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற அமைச்சக செயலாளர் அசோக பீரிஸ் தலைவராகவும், நாலக்க திசாநாயக்க செயலாளராகவும் கொண்ட இந்த ஆணைக்குழுவில் பதினைந்து உறுப்பினர்கள் உள்ளனர்.

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, அரசு ஊழியர்களின் தொழில்முறையை மேம்படுத்துவது, மற்றும் புதிய தொழில்நுட்பப் போக்குகள் மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப பொதுச் சேவையை எவ்வாறு கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்த வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்குவது ஆகிய பொறுப்புகள் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |