கனடா செல்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்
கனடாவிற்கு வரும் பயணிகளுக்கான அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கனடாவின் தடுப்பூசி வீதம், புதிய தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சமீபத்திய கொவிட் தொற்றை நாடு கடந்துவிட்டதைக் காட்டும் அறிவியல் மாதிரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கனேடியர்களுக்கு நன்றி
தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட கனேடியர்களுக்கு நன்றி தெரிவித்த அந்நாட்டின் சுகாதார அமைச்சர், எல்லையில் சுகாதார நடவடிக்கைகளைப் பாதுகாப்பாக நீக்கும் நிலையை நாங்கள் அடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
தேவை ஏற்பட்டால் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ்(Jean-Yves Duclos) தெரிவித்துள்ளார்.
முககவசம் அணிவது நீக்கம்
இந்த நடவடிக்கைகளில் சிலவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கனடியர்களின் பாதுகாப்பை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்றால், நாங்கள் அதைச் செய்ய வேண்டும், என்று அவர் ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் விமானங்கள் மற்றும் ரயில்களில் பயணிகள் முககவசம் அணிய வேண்டும் என்ற நிபந்தனையும் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
