இலங்கை திரும்புகிறார் கோட்டாபய..! திகதி வெளியானது
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை திரும்புவார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
தாய்லாந்தில் கோட்டாபய

கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து இலங்கையில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு வழியாக சிங்கப்பூரை சென்றடைந்தார்.
இதேவேளை, அவர் கடந்த 11 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றிருந்தார்.
இராஜதந்திர கடவுச்சீட்டு

தாய்லாந்து சென்ற கோட்டாபய இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பதால் அவர் அங்கு 90 நாட்கள் தங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போது எதிர்வரும் 24 ஆம் திகதி அவர் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்