கோட்டாபயவுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதங்கள்! வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
சகல வரப்பிரசாதங்களும் உண்டு
கோட்டாபய ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்த போதிலும், முன்னாள் சிறிலங்காவின் அதிபர் ஒருவருக்கான சகல வரப்பிரசாதங்களும் உண்டு என அதிபர் சட்டத்தரணி கலாநிதி ஜயதிஸ்ஸ கொஸ்தா தெரிவித்துள்ளார்.
தனது பதவிக் காலத்திற்கு முன்னதாக பதவியை விட்டு விலகிய போதிலும் கோட்டாபயவிற்கு முன்னாள் அதிபருக்கான சகல வரப்பிரசாதங்களையும் அனுபவிக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளார்.
1986ம் ஆண்டு 4ம் இலக்க சிறிலங்காவின் அதிபருக்கான உரிமைகள் குறித்த சரத்தில், முன்னாள் சிறிலங்காவின் அதிபருக்கான வரப்பிரசாதங்கள் கோட்டாபய ராஜபக்சவிற்கும் அவருக்கு பின் அவரது பாரியாருக்கும் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார அதிபர் முதல் பதவி விலகிய சந்தர்ப்பம்
இலங்கையில் நிறைவேற்று அதிகார அதிபராக கூடுதல் காலம் ஆட்சி செய்தவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பதுடன் அவர் 11 ஆண்டுகளும் ஏழு மாதங்களும் சிறிலங்காவின் அதிபராக பதவி வகித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார அதிபர் ஒருவர் பதவி விலகிய முதல் சந்தர்ப்பமாக கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய சந்தர்ப்பம் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.