கோட்டாபயவின் விசேட கோரிக்கை!
ஊடகவியலாளர்கள் விமர்சனங்களைச் செய்து மக்களை அதைரியமூட்ட வேண்டாம் என அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையிலான பகுதி அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டை கட்டியெழுப்பவே நாம் வந்துள்ளோம். அவ்வாறெனில் நான் ஊடகவியலாளர்களிடம் கோருகின்றேன், நீங்கள் இந்த அபிவிருத்திப் பணிகளின் பங்குதாரர்களாக மாறுங்கள். அதுதான் தேவை.
விமர்சனங்களைச் செய்து மக்களை அதைரியமூட்ட வேண்டாம். ஊடகவியலாளர்கள் நேர்மறையாக சிந்திக்க வேண்டும்.
அன்று முடிவுக்கு கொண்டு வர முடியாது என கூறப்பட்ட போரை நாம் முடிவுறுத்தினோம். அதேவிதமாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என அரச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியில் இன்று நண்பகல் வரையில் வாகனங்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This