உடன் அமுலுக்கு வரும் வகையில் சரத்வீரசேகரவிடமிருந்து இரண்டு நிறுவனங்களை பறித்த கோட்டாபய
gotabaya
sarathweerasekara
defence ministry
By Sumithiran
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கீழிருந்த இரண்டு நிறுவனங்கள், உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்படி அமைச்சர் வீரசேகரவின் கீழிருந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பல்சேவை அபிவிருத்தி படையணி திணைக்களம் ஆகியவற்றையே ஜனாதிபதி மீளப்பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு மீதமிருப்பது இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய பொலிஸ் அப்பியாச நிறுவனம் ஆகியன மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி