கோட்டாபய அரசாங்கத்திற்கு தெற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்!
கோட்டபாய அரசாங்காத்தின் நடவடிக்கைகளை பார்கும்போது அனைத்தையும் ஒன்றிணைத்து தொலைக்காட்சியில் நாடகம் ஒன்றை நடத்தலாம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பிரதமராக இருந்தவர் தன்னுடைய சகோதரருக்கு நிதியமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் ஓய்வு எடுப்பதாக ஒரு நாடகம் நடித்தார்.
அதன் பிற்பாடு அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராகச் சென்று ஏதோ தான் இந்த நாட்டை காப்பாற்ற போவதாக தெரிவித்து நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார்.
அதன்பின் பி.பீ.ஜெயசுந்தர செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஒரு நாடகம், அலி சப்ரி நீதி அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக ஒரு நாடகம் ஆகவே தொடர்ச்சியான நாடகங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
அதில் ஒரு பாகம் தான் இந்த சுசில் பிரேமஜயந்தவின் பதவி பறிப்பு என்று நான் நம்புகின்றேன் ஆகவே இனி மக்கள் ஏமாறக் கூடாது.
எதிர்வரும் காலங்களில் இந்த ராஜபக்ச குடும்பத்திற்கு சரியான ஒரு பாடத்தை தெற்கில் இருக்கின்ற மக்கள் வழங்க வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன். “
அதே போன்று வடக்கு கிழக்கில் நாங்கள் எங்களது செயற்பாடுகளை ஆரம்பிக்க தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.