உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமான கோட்டாபயவின் பெயர்!

Sri Lanka Easter Attack Sri Lanka
By Dharu Mar 12, 2026 03:48 AM GMT
Report

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நடந்த 2019 Sri Lanka Easter Sunday Bombings என சர்வதேச ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்குப் பின்னர் பல சந்தேகநபர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வரிசையில் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் ஒன்று சாரா ஜஸ்மின் (Sara Jasmine) என்பவருடையது.

அவர் நீர்கொழும்பு தற்கொலை குண்டுதாரியான  அவர்களின் மனைவியாகக் கருதப்படுகிறார்.

அரசியல்மயமாக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை!

அரசியல்மயமாக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை!

சாரா ஜஸ்மின்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (2019 ஏப்ரல் 21) தொடர்பான விசாரணையில், சந்தேகநபரான புலஸ்தினி மஹேந்திரன் (சாரா ஜஸ்மின் என்றும் அழைக்கப்படுபவர்) இன் மரணத்தை உறுதிப்படுத்துவதற்காக மூன்றாவது டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட்டது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழுத்தம் அல்லது உத்தரவு குறித்து சமீபத்தில் வெளியான தகவல்கள் உள்ளன.

இது இலங்கையின் பல்வேறு ஊடகங்களில் புலனாய்வு செய்திகளாக வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தற்போது நேற்று சுரேஸ் சலே(அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி) கைது செய்யப்பட்டமை தொடர்பில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி - ரணிலுக்கு எதிராக விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரி - ரணிலுக்கு எதிராக விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூழல்

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் (Easter Sunday attacks) மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்கள் இலக்கு வைக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமான கோட்டாபயவின் பெயர்! | Gotabayas Name Exposed Easter Attack Investigation

இதில் 270க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல்களை தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழு நடத்தியது.

தாக்குதலுக்குப் பின்னர், கொழும்பிலிருந்து கல்முனைக்கு தப்பிய சஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிலர், 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது பகுதியில் ஒரு வீட்டில் வெடிப்பில் இறந்தனர்.

இதில் சாரா ஜஸ்மின் அந்த வீட்டில் இருந்தார், ஆனால் அவர் அந்த வெடிப்பில் இறக்கவில்லை என்பதை இரண்டு டி.என்.ஏ சோதனைகள் உறுதிப்படுத்தின.

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம்

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம்

மூன்றாவது டி.என்.ஏ சோதனை உத்தரவு

2022ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான பாதுகாப்பு கூட்டத்தில், சாரா ஜஸ்மினின் டி.என்.ஏக்கு மூன்றாவது சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமான கோட்டாபயவின் பெயர்! | Gotabayas Name Exposed Easter Attack Investigation

இந்த உத்தரவு, முந்தைய இரண்டு சோதனைகள் அவரது மரணத்தை உறுதிப்படுத்தாத நிலையில், விசாரணையை சரியான திசையில் வழிநடத்துவதற்காகவா அல்லது ஆதாரங்களை மறைக்கவும், விசாரணையை சீர்குலைக்கவும் உத்தரவிடப்பட்டதா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த உத்தரவு எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது, யாருக்கு கொடுக்கப்பட்டது, மற்றும் இதில் ஏதேனும் குற்றச் செயல் உள்ளதா என்பதை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2026 மார்ச் 11 ஆன நேற்று, கொழும்பு நீதவான் இஸுரு நெத்திகுமார, குற்றப்புலனாய்வுத் துறை (CID)க்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின்படி, 2022இல் ஜனாதிபதி கொடுத்த உத்தரவு குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இது விசாரணையை சீர்குலைக்கும் முயற்சியா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த உத்தரவு.

மேலும், இந்த வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறை இயக்குநர் சுரேஷ் சலே தொடர்பான 25 பக்க ஆதார சுருக்கத்தை CID நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.   

சுரேஷ் சாலேயின் அதிரடி கைது - அரசின் மீது பாயும் கடும் விமர்சனங்கள்

சுரேஷ் சாலேயின் அதிரடி கைது - அரசின் மீது பாயும் கடும் விமர்சனங்கள்

தொடர்புடைய சந்தேகங்கள் - பரிமாணம்

முந்தைய இரண்டு டி.என்.ஏ சோதனைகள் சாரா ஜஸ்மினின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் மூன்றாவது சோதனை அவரது தாயின் டி.என்.ஏவுடன் பொருந்தியதாகக் கூறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அம்பலமான கோட்டாபயவின் பெயர்! | Gotabayas Name Exposed Easter Attack Investigation

இந்த மாதிரி சேகரிப்பு முறை சந்தேகத்துக்குரியது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜேபாலா கூறியுள்ளார்.

CID இதை விசாரித்து வருகிறது, மேலும் நீதிமன்றத்தில் விவரங்களை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உளவுத்துறை ஈடுபாடு அல்லது அரசியல் தலையீடு இருந்ததா என்பதை ஆராய்கிறது.

சனல் 4 (Channel 4) தொலைக்காட்சி வெளியிட்ட வெளிப்பாடுகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தற்போதைய ஆட்சியில் (2024 செப்டம்பரிலிருந்து), புதிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதில், ஹன்சீர் அசாத் மௌலானா போன்ற சாட்சிகளின் அறிக்கைகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன.

பிள்ளையான் போன்றோரின் முன்கூட்டிய அறிவு மற்றும் உளவுத்துறை இணைப்புகள் விசாரிக்கப்படுகின்றன.   

எனினும் இந்த நகர்வுகள் முந்தைய ஆட்சிகளின் (மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க) கீழ் விசாரணையில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிலையில் அரசு, உயர் பதவியினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ளது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025