சூது விளையாட்டில் கோட்டாபய அரசு - பிமல் ரத்னாயக்க தாக்கு
Corona
SriLanka
Janatha Vimuthi Peramuna
Bimal Rathnayake
By Chanakyan
அரசாங்கம் தற்போது உருவாகியுள்ள கொத்தணியை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்த தவறியுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அறிவிக்கப்படுகின்ற கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் எமக்கு சந்தேகம் நிலவுகிறது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் இதனைக் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் பி.சி.ஆர். பரிசோதனைகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் மோசமானதொரு அரசியல் சூது விளையாட்டை அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,