துணிச்சல் இருந்தால் சர்வதேச நீதிமன்றில் சந்திக்கலாம் - ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு சவால்
srilanka
gotabhaya
crimes
By Vasanth
ஜனாதிபதி என்பதற்காக படுகொலைகளைச் செய்யமுடியாது - அவர் செய்த படுகொலைகள் ஒருபோதும் மறைந்து விடாது.
துணிச்சல் இருந்தால் சர்வதேச நீதிமன்றத்திற்கு வாருங்கள் - நாம் குற்றச்சாடடுக்களை நிரூபிக்கத் தயாராக உள்ளோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன் போது மேலும் பேசிய அவர், ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையானது அரசியல் நோக்கத்தை மாத்திரம் அடிப்படையாக கொண்டது.
அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட அமைப்புக்களோ அல்லது தனி நபர்களோ எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்புபட்டவர்கள் அல்ல எனவும் மேலும் கூறினார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்