கோட்டாபயவின் உரையை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது நாடாளுமன்ற கூட்டத் தொடர்!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் உரையையடுத்து நாடாளுமன்றம் நாளை மதியம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு 9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் வைபவரீதியாக அரச தலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து, அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய கோட்டாபய ராஜபக்சவினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதன்போது அரச தலைவர் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு நாட்டுப் பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற் கொண்டவை என்றும் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று, தனது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை, தற்போதைய அரசாங்கம் உரிமை மீறல்களுக்கு ஆதரவளிக்கவில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், கோட்டாபயவின் கொள்கை பிரகடன உரையின் பின்னர் நாளை பிற்பல் 1.00 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.