பல்வேறு ஊழல் சம்பவங்கள் பின்னணியில் இருக்கும் முக்கிய தரப்பு அம்பலம்!
பல ஊழல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் சில அரச அதிகாரிகளின் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக பதவி விலகும் கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 41வது கணக்காய்வாளர் நாயகமாக 2019 முதல் 6 ஆண்டுகள் பணியாற்றி வந்த சூலந்த விக்ரமரத்ன தனது பதவிக் காலத்தை முடித்து நேற்று ஓய்வு பெற்றார்.
அதன்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஊழலுக்கு அரசியல்வாதிகள் அடிக்கடி பொறுப்புக்கூற வேண்டியிருக்கும், எனினும் அவற்றுக்கு சில அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதை எங்கள் விசாரணைகள் காட்டுகின்றன.
கோப் மற்றும் கோபா குழு
அரசியல்வாதிகள் மட்டுமே காசோலைகள் மற்றும் வவுச்சர்களில் கையொப்பமிட முடியாது, இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் அமைப்பிற்குள் உள்ள அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பிரச்சினையை நாம் இப்போது கவனிக்கவில்லை என்றால், நாடு அதே பாதையில் தொடரும்.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதானது, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (COPE) மற்றும் பொதுக் கணக்குகள் தொடர்பான குழு (COPA) மூலமாக மட்டுமே சாத்தியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
